346
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
வேளாளர்க்கு உரியவை:
உழுதல், பிறதொழில்கள், விருந்தினரைப் பாதுகாத்தல், விலங்குகளை வளர்த்தல், வழிபடுதல், கல்வி கற்றல் என்னும் ஆறுபகுதிகளும் வேளாளர்க்கு உரியவையாம்.
வேளாளர்க்குரிய திருமணமுறை:
அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவர்க்கும் உரிய சடங் குடன் கூடிய மன்றல் விழவு, வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு. இம்முறை முற்காலத்து இருந்தது என்பதூஉம் பிற்காலத்துத் தவிர்க்கப் பட்டது என்பதூஉம்
அறியலாம்.
வேளாண்வாகை:
தனால்
அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வகுப்பினரும் நெஞ்சத்தாலே விரும்புமாறு அவர் ஏவல் வழி ஒழுகியது வேளாண்வாகை என்னும் துறையாம்.
(எ.டு)
66
மூவரும் நெஞ்சமர முற்றி அவரவர்
ஏவல் எதிர் கொண்டு மீண்டுரையான்- ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழுவான் உலகுக் குயிர்.
வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்து:
முடியுடை வேந்தர்க்குரிய தொழிலாகிய தன்பகை வயிற் றானே சேறலுந் தான்திறை பெற்ற நாடுகாக்கப் பரிதலும், மன்னர்க்குப் பின்னோரான வேளாளரை ஏவிக் கொள்ளுதலும் ஆகிய இலக்கணங்கள் மூன்றும், அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறு நில மன்னரிடத்தும் பொருந்தும் என்பதாம். (எ.டு)
66
விலங்கிருஞ் சிமயக்குன்றத்தும்பர்
வேறுபன் மொழிய தே௭ முன்னி
வினை நசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு புனைமா ணெஃகம் வலவயினேந்தீச்
செலமன்’