எழுத்து
31
காலங்காட்டும் பகுதி :
கு, டு, று என்னும் மூன்றுயிர் மெய்களை இறுதியாக வுடைய சில குறிலிணைப் பகுதிகள் வேறுபட்டு இறந்தகாலங் காட்டும்.
(எ.டு) புக்கான், விட்டான், பெற்றான்.
காண்டிகை யுரையின் இலக்கணம் :
கருத்துரையும்
பதவுரையும்
எடுத்துக்காட்டுமாகிய
மூன்றனையுஞ் சொல்லுதலாலும் அம்மூன்றனோடு வினா விடை என்னும் இரண்டனையுங் கூட்டிச் சொல்லுதலாலும் சூத்திரத்துளிருக்கின்ற பொருளை விளக்குவன காண்டிகையுரை
யாகும்.
காலங்காட்டு மிடைநிலைகள் :
காலங்காட்டு மிடை நிலைகள், தெரிநிலைவினைப் பகுபதங் களுக்கு வரும். அவை இறந்தகால விடைநிலை, நிகழ்கால விடை நிலை, எதிர்கால விடை நிலை என மூன்று வகைப்படும்.
‘கீழ்’ என்பதற்குச் சிறப்புவிதி :
கீழ் என்னுஞ் சொல்லின் முன் வருகிற வல்லினம் ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் மிக்கும் வரும்.
(எ.டு) கீழ் + குளம் = கீழ்குளம், கீழ்க்குளம்
குணசந்தி :
வடசொற்களில், அ ஆ வின்முன்
ஈ வரின் ஈறு
முதலுங்கெட ‘ஏ’ தோன்றுவதும், அ, ஆ வின் முன் உ ஊ வரின் ஈறும் முதலுங்கெட 'ஓ' தோன்றுவதும் குணசந்தி எனப்படும். (எ-டு) நர + இந்திரன் நரேந்திரன்
―
சுர + ஈசன் சுரேசன்
தரா + இந்திரன்
தரேந்திரன்
மகா + ஈசன் மகேசன்
―
பாத + உதகம் - பாதோகம்
ஞான + ஊர்ச்சிதன் ஞானோர்ச்சிதன்
கங்கா + உற்பத்தி
―
கங்கோற்பத்தி
தயா + ஊர்ச்சிதன்
தயோர்ச்சிதன்.