458
―
இளங்குமரனார் தமிழ்வளம் 4
கொண்டா னிருப்பக் கொடுங்குழையா டெய்வமுமொன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.'
99
தில் கடைநின்ற வைக்கற்பாற்றன்று என்பது இளிவரவு முதலியவற்றோடு சென்றியைந்து பொருள் தந்தமையால் இது கடைநிலைத் தொழிற்றீவகமாகும்.
கடை நிலைப் பொருட்டீவகம்
செய்யுளின்
L
இறுதியில்
நின்ற பொருட் பெயர்.
அச்செய்யுளில் பலவிடங்களில் நிற்கும் பலசொற்களோடு பொருந்திப் பொருள் தருவது கடைநிலைப் பொருட்டீவகமாகும்.
எடு :-
“புறத்தன வூரன நீரன மாவின்
றிறத்தன கொற்சே ரியவே - அறத்தின்
மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி முகனை முறைசெய்த கண்
இதில் கடைநின்ற கண் என்னும் பொருட் பெயர் புறத்தன என்பது முதலியவற்றோடு சென்றியைந்து பொருள் தந்தமை யான் இது கடைநிலைப் பொருட்டீவகமாயிற்று.
தனுள் கண் - பொருள். புறத்தன - மான். ஊரன - அம்பு. நீரன - தாமரை. மாவின்றிறத்தன - மாவடு, கொற்சேரிய - வாள். கரந்துறை செய்யுள்
ஒரு பாடலைப் பாடி முடித்து, முடித்த அப்பாடலின் இறுதி மொழி ஈற்றெழுத்துத் தொடங்கி, எதிரேறாக இடை யிடையோரெழுத்தாக இடையிட்டு முதன் மொழி முதலெழுத்து அயலடைய முடிக்க மற்றோர் பாட லாக அதனுள்ளே மறைந்துறைவது கரந்துறை செய்யுளாகும்.
எடு :-
போர்வை வாயூராரலரளி பொருகாம நீர்மையாழ் வாரயலணை தருமிக வேர்தவா வாழ்தலாமயில் கைமுருகுகு
தார்தராமூதாமணி தகவுருவமும்
இதனுள் மறைந்த செய்யுள்
“முருகணிதாரார் குருகையிலாழ்வார்