அணி
489
எடு :-
66
வானக கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின.'
(இ.ள்) மேகம் கடலினிடத்துற் கொடுக்கும் ஓசையோடு கூடியிருந்தன. வானத்தை வவ்விக் கொள்ளும் எழுச்சியவாயின; விண்ணகத்தை ஒக்கும் புகழை உடையன; மரங்களை உச்சியிலே உடையன பெரிய மலைகள்.
நிகழ்வின் நவிற்சியணி
முன் நடந்ததையேனும் பின்நடப்பதை யேனும் அப்போது நடக்கிறதாகச் சொல்லுவது நிகழ்வின் நவிற்சியணியாம். இதனை வடநூலார் 'பாவிகாலங்கார' மென்பர்.
எடு :-
"பிரிவுணர்ந்த அந்நாளப் பேதைவிழிக் கஞ்சம் சொரிதரளம் யான்றூர நாட்டில் - மருவலுறும்
இப்போதுங் காண்கின்றேன் என்செய்கோ இங்கிதற்குத் துப்போது தோழநீ சூழ்ந்து."
நிதரிசன வணி
ஒரு வகையால் நிகழ்கின்ற ஒன்றற்குப் பொருந்தியதொரு பயனைப் பிறிதொன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வதாதல், தீமை புலப்பட நிகழ்வதாதல், செய்வதெனச் சொல்லுவது நிதரிசன மென்னும் அணியாம்.
எடு :-
“பிறர்செல்வங் கண்டாற் பெரியோர் மகிழ்வும்
சிறியோர் பொறாத திறமும் - அறிவுறீஇச்
செங்கமல மெய்ம்மலர்ந்த தேங்குமுத மெய்யயர்ந்த
பொங்கொளியான் வீறெய்தும் போது.”
பொங்கொளியான் - சூரியன். வீறு - ஒளி; பெருமை.