490
நிந்தை யுவமை
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
து உவமை வகைகளுள் ஒன்று உவமையைப் பழித்து உவமிப்பது நிந்தையுவமையாம்.
எடு
"மறுப்பயின்ற வாண்மதியு மம்மதிக்குத் தோற்கும் நிறத்தலரு நேரொக்கு மேனும் - சிறப்புடைத்துத் தில்லைப் பெருமா னருள்போற் றிருமேனி முல்லைப்பூங் கோதை முகம்.
நியமவுவமை
இது உவமை வகைகளுள் ஒன்று. இன்னதற்கு இன்னதே யுவமையாமெனத்
தேற்றேகாரம்
சொல்லுவது நியம வுவமையாகும்.
எடு :-
புணர்த்துத்
“தாதொன்று தாமரையே நின்முக மொப்பதுமற்
றியாதொன்று மொவ்வா திளங்கொடியே! - மீதுயர்ந்த சேலே பணியப் புலியுயர்த்த செம்பியர்கோன் வேலே விழிக்கு நிகர்.”
நியமவிலக்குச்சிலேடை
துணிந்து
சிலேடித்த பொருளை நியமஞ் செய்து அந்நியமத்தை விலக்குதல். நியமம் - உறுதி.
எடு :-
“சிறைபடுவ புட்குலமே தீம்புனலு மன்ன இறைவநீ காத்தளிக்கு மெல்லை - முறையில் கொடியன குன்றத்தின் மாளிகையே யன்றிக் கடியவிழ்பூங் காவு முள.'
இதனால் சிறைபடுதலுங் கொடுமையும் இவன் காக்கின்ற நிலத்தின்கண் இல்லையெனக் கிடந்தவாறு கண்டு கொள்க. நியமச்சிலேடை
பல பொருள்களுக்குப் பொருந்துமாறு சிலேடித்ததைத் தேற்றேகாரம் புணர்த்தி ஒன்றற்கு நியமமாக்குவது நியமச் சிலேடையாகும்.