36
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
அதற்குப் பின்வரும்; முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து, அதற்குப் பின்னும் முன்னும் வரும்.
(எ.டு) 1. சாத்தன் வந்தான்; அவனுக்குச் சோறிடுக.
எருது வந்தது; அதற்குப் புல்லிடுக.
2. நம்பியவன்; அவனம்பி.
சுட்டெழுத்துகள் :
க
அ, இ, உ என்னும் மூன்று எழுத்துக்களும் சொல்லுக்கு முதலில் நின்று சுட்டுப் பொருளைத் தருமானால் சுட்டெழுத்து களாகும். இவ்வெழுத்துகளுள் அகரம் தொலைவிலுள்ள பொருளையும் இகரம் அருகில் உள்ள பொருளையும் உகரம் மேல் நிற்கும் பொருளையும் சுட்டுதற்கு வரும். இச்சுட்டு அகச்சுட்டு, புறச்சுட்டு என இருவகைப்படும்.
—
(எ-டு) அவன் இவன் உவன் அகச்சுட்டு
அம்மனிதன், இம்மனிதன், உம்மனிதன் புறச்சுட்டு. சுட்டு முதலாகிய வகரவீறு, மென்கணத்தோடு புணர்தல் : சுட்டு முதலாகிய வகரவீறு மென்கணம் வந்து இயைந்த விடத்து அவ்வகரம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்.
(எ.டு) அவ் + ஞாண்
=
இவ் + ஞாண்
=
அஞ்ஞாண் இஞ்ஞாண்
உஞ்ஞாண்
உவ் + ஞாண்
சுட்டுமுதலாகிய வகரவீறு வன்கணத்தோடு புணர்தல் : சுட்டுமுதலாகிய வகரவீறு வன்கணம் வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் அவ் வகரம் ஆய்தமாகத் திரியும்.
(எ.டு) அவ் + கடிய
=
அஃகடிய
இவ் + கடிய
=
இஃகடிய
உவ் + கடிய
உஃகடிய.
சுட்டுமுதலாகிய வகரவீறு இடைக்கணம் உயிர்க்கணம் ஆகியவற்றோடு புணர்தல் :
சுட்டுமுதலாகிய வகரவீற்றுடன்
டைக்கணமும்
உயிர்க்கணமும் வந்து புணர்ந்தால் இயல்பாய் முடியும்.