அணி
495
எடு :-
“மலர்வாவி போல்வரான் மாதர் கமல மலர்போலு மாதர் வதனம் - மலர்சூழ் அளிக்குலங்கள் போலு மளக மதனுட் களிக்குங் கயல்போலுங் கண்.”
பரவசவிலக்கு
தன்வயமல்லாமை தோன்றக் கூறி விலக்குவது பரவச
விலக்கு என்னும் அணியாம்.
எடு :-
“செல்கை திருவுளமேல் யானறியேன் றேங்கமழ்தார் மல்ல கலந்தங்கு மதர்விழியின் - மெல்லிமைகள் நோக்குவிலக்குமே னோவா ளிவள்காதல் போக்கி யகல்வாய் பொருட்டு.
பரிவருத்தனை யணி
பொருள்கள் ஒன்றற்கு ஒன்று கொடுத்து ஒன்று கொண்டன வாகச் சொல்லுவது பரிவருத்தனை என்னும் அணியாம். எடு :-
66
'காமனை வென்றோன் சடைமதியுங் கங்கையும்
தாம நிழலொன்று தாங்கொடுத்து - நாமப்
பருவா ளரவின் பணமணிக டோறும்
உருவா யிரம்பெற் றுள.
பரியாயவணி : (அ)
وو
யாதாயினும் ஒரு பொருள் பழமைத்தாகித் தொடர்புறப் பலவாயினும். பலமுறையே பலபிறப்புப் பயின்ற தென்று கூறுவதும் பரியாயம் என்னும் அணியாகும்.
எடு :-
66
“அன்று மலரில மிர்திற் கொழுமுனையிற்
றுன்று துழாய்க்காட்டிற் றோன்றியே - யின்று
நினையிற் றமிழ்மாற னீள்குன்ற வாணர்
மனையிற் பிறந்தனள்பூ மாது.