510
இளங்குமரனார் தமிழ்வளம்
மடங்குதல் நவிற்சியணி
―
4
ஒருவர் ஒரு பொருளை அறிவுறுத்தற்குச் சொல்லிய சொல்லுக்கு மற்றொருவர் சிலேடையினால் மற்றொரு பொருளைக் கற்பித்தலாம். இதனை வடநூலார் 'வக்ரோக்தியலங்கார’ மென்பர்.
எடு :-
“என்பிழைநெஞ் சிற்பொறுமென் றோதவர சென்பிழையே மன்பொறுக்கி நெஞ்சிலென்றாள் மாது.
மயக்கவணி
ப
>
ஒப்புமையினால் ஒருபொருளை மற்றொரு பொருளாக அறிதலாம். இதனை வடநூலார் 'பிராந்தி மதாலங்கார’ மென்பர். அது ஆகாததை அதுவென அறிதல்.
எடு :-
“மழைக்கண் மங்கையர் பயிறர மரகத மணியின்
இழைத்த செய்குன்றின் பைங்கதிர் பொன்னிலத் தெய்தக் குழைத்த பைந்தரு நீழலிற் குலவுமா னினங்கள்
தழைத்த புல்லென விரைவொடு தனித்தனி குறிக்கும்.’
இதில், மரகத
மயக்கவணியாகும்.
மயக்க வொழிப்பணி
மணிக்கதிரைப் புல்லென அறிந்தது
இது ஒழிப்பணிவகைகளுள் ஒன்று. ஒருபொருளை மற்றொரு பொருளென்று கொள்ளும் மயக்கத்தை உண்மை கூறி ஒழிப்பதாம்.
எடு :-
66
“மனக்கினிய தோழி மடந்தைமுக நோக்கி
உனக்குடலி னொன்றியெழு வெப்பந் - தனக்குச் சுரநோயோ காரணநீ சொல்லெனவ தான்று பொருமார னென்றனளப் பொன்.
மருட்கையுவமை
து உவமை வகைகளுள் ஒன்று. உவமை கூறுவான் மருட்கை வயத்தனாகி யொரு பொருட்குக் கூடாத பண்பினைக்