526
வன்சொல் விலக்கு
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
கடுஞ்சொற்களைக் கூறிக் குறிப்பினால் விலக்குவது வன் சொல் விலக்கணியாம்.
எடு :-
“மெய்யே பொருண்மேற் பிரிதியேல் வேறொரு தையலை நாடத் தகுநினக்கு - நெய்யிலை வேல் வள்ளல் பிரிவற்றம் பார்த்தெங்கள் வாழ்நாளைக் கொள்ள உழலுமாம் கூற்று.
வாக்கியப் பொருட்காட்சியணி
இது காட்சியணி வகைகளுள் ஒன்று. இரண்டு வாக்கியப் பொருள்களுக்கு ஒற்றுமையைக் கூறுவதாம்.
எடு :-
"முறைகெழு வள்ளற்கு முனிவின்மை திங்கட்
கறைகளங்க மில்லாமை யாம்.
இதில், கோவமில்லாமையில் களங்கமில்லாமை கூறப்
பட்டது.
வாழ்த்தணி
இன்ன தன்மையை யுடையார்க்கு இன்னது நிகழ்க என்று புலவர்கள் தாம் கருதிய தனை விதிப்பது வாழ்த்தென்னும் அணி
யாம்.
எடு :-
66
"மூவாத் தமிழ்பயந்த முன்னூன் முனிவாழி ஆவாழி வாழி யருமறையோர் - காவிரிநாட் டண்ண லனபாயன் வாழி யவன்குடைக்கீழ் மண்ணுலகில் வாழி மழை.
வாழ்த்து விலக்கு
வாழ்த்தி வைத்து விலக்குவது வாழ்த்து விலக்கு என்னும்
அணியாம்.
எடு :-
"செல்லு நெறியனைத்துஞ் சேம நெறியாக மல்க நிதியம் வளஞ்சிறக்க - வெல்லும்