530
எடு :-
இளங்குமரனார் தமிழ்வளம்
66
வையம் பரவும்கிழ் மாறன் செவ்வாயுந்
துய்ய நயனத் துணைப்போதுஞ் செய்ய
―
―
4
முகத்தா மரையுடன் கைம்முத்திரை யுங்கண்ட சுகத்தார்க்கு முண்டோ துயர்.’
வியப்பணி
ஒரு சிறந்த பயனைக் கருதி, அதற்கு வேறான ஒன்றைச் செய்ததாகக் கூறுவது வியப்பணியாகும்.
எடு :-
“ஓதுந் திறத்தி லுயர்ந்தோர்கள் தாழ்குவரெப் போதுமுயர் வெய்தற் பொருட்டு.
வியப்பு இறையணி
இஃது இறையணி வகைகளுள் ஒன்று. ஒருவினாவிற்கு அதனையே விடையாகவும் பலவினாக்களுக்கு கு
விடையாகவுஞ் சொல்லுதலாம்.
எடு :
“என்பணி பூண்டா னிறைவன்.”
-
ஒன்றே
இதில், என்பணி யாது அணியெனவும், எலும்புப் பூணெனவுமாம்.
விரிவுவமை
உவமானமும், உவமேயமும், பொதுத்தன்மையும், உவமை யுருபும் ஆய நான்கும் விரிந்து வருவது விரிவுவமையாம். எடு :-
“பால்போலு மின்சொல் பவளம்போற் செந்துவர்வாய் சேல்போல் பிறழுந் திருநெடுங்கண் - மேலாம்
புயல்போற் கொடைக்கைப் புன்னாடன் கொல்லி அயல்போலும் வாழ்வ தவர்.”
இதில், பால்போலும் இன்சொல் என்புழி, பால்
-
உவமானம், சொல் உவமேயம், இனிமை பொதுத்தன்மை,
-
-
போலும் உவமையுருபு.