இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
538
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்?
இதில் முன்னிரண்டு அடிகளில் கூறப்பட்ட ‘கதிரவன் மறைவு’ சிறப்புப் பொருள்; பின்னிரண்டு
அடிகளில்
சொல்லப்பட்ட ‘உலகத்தில் தோன்றியவர்கள் இறப்பார்கள்' என்பது பொதுப் பொருள்.
சிறப்புப் பொருளை உறுதிப்படுத்தி முடிப்பதற்குப்
பொதுப் பொருள் கூறப்பட்டிருக்கிறது.
வேற்றுப் பொருள் வைப்பணி : (ஆ)
ஒரு பொருளின் திறத்தைக் கூறத் தொடங்கிப் பின்னர் அது முடித்தற்கு வலிமையுடைய பிறிதொரு பொருளை உலக மக்களால் அறியப்படும் முறையில் வைத்துக் கூறுவது வேற்றுப் பொருள் வைப்பென்னும் அணியாம்.
எடு :-
“நிறைவாரி யைத்தாண்டி நின்றா னனுமன் அறைபெரியோர்க் கென்னோ அரிது.”