எழுத்து
41
‘ட’ முன் மயங்கும் எழுத்துகள் :
டகரத்தின் முன் க ச ப என்னும் மூன்று மெய்களும் இணங்கி மயங்கும்.
(எ.டு) வெட்கம், கட்சி, திட்பம்
ண முன் மயங்கும் எழுத்துகள் :
ணகரத்தின் முன் அதற்கு இனமாகிய டகரமும் க, ச, ஞ, ப, ம, ய, வ ஆகிய ஏழு மெய்களும் மயங்கும்.
(எ.டு) விண்டு, உண்கு, வெண்சோறு, வெண் ஞமலி, பண்பு, வெண்மை, மண்யாது, மண் வலிது.
ணகரம் பிறக்குமிடம் :
நாக்கின் நுனிப்பாகம் மேல்வாயைச் சார்தலால் ணகரம்
பிறக்கும்.
ணகர வீற்றின் கேடு :
தனிக் குற்றெழுத்தைச் சாராத ணகரம் வருநகரந்திரிந்த விடத்து, அல்வழி வேற்றுமை ஆகிய இருவழியிலும் கெடும்.
(எ-டு) அல்வழி
தூண் + நன்று
―
அரண் + நன்று
தூணன்று அரணன்று
வேற்றுமை
தூண் + நன்மை
―
தூணன்மை
அரணன்மை
அரண் + நன்மை
ணகர வீற்றின் இயல்பும் திரிபும் :
வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் ணகரம் டகரமாகத் திரியும். மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பாகும். அல்வழிப் புணர்ச்சியில் மூன்றின் மெய்களும் வந்தாலும் இயல்பேயாம்.
(எ-டு) கண் + களிறு கட்களிறு
வல்லினம் வர ட வாயிற்று-
வேற்றுமையில் ண,