எழுத்து
‘தெங்கு' என்பதற்குச் சிறப்பு விதி :
49
வருமொழியில் காயென்னுஞ் சொல் வருமாயின் தெங் கென்னும் நிலைமொழி முதல் நீண்டு ஈற்றில் உள்ள உயிர்மெய் நீங்கும்.
(எ.டு) தெங்கு + காய்
=
தேங்காய்
(நீர் தேங்கி நிற்கும் காய் ஆதலால் தேங்கு + காய் தேங்காய் ஆதல் கண்கூடு.)
'தெவ்' என்பதற்குச் சிறப்பு விதி :
=
தெவ் என்னும் பகைமையை யுணர்த்தும் பெயர், யகர மல்லாத மெய்களோடு புணருமிடத்துத் தொழிற்பெயர்போல உகரச்சாரியை பெற்று முடியும். மகரம் வரின் உகரச்சாரியை பெறுதலேயன்றி ஒரோவிடத்து வகரமெய் மகரமெய்யாகத் திரியவும் பெறும்.
அல்வழி
(எ.டு) தெவ் + கடிது
=
தெவ்வுக்கடிது
தெவ் + மாண்டது = தெவ்வுமாண்டது
தெவ் + வந்தது
==
தெவ்வு வந்தது
தெவ்வுமன்னர்
தெவ் + மன்னர் தெவ் + மன்னர்
தெவ் + கடுமை
=
=
=
தெவ் + மாட்சி
=
தெம்மன்னர்
தெவ்வுக்கடுமை
தெவ்வுமாட்சி
தெவ் + வன்மை = தெவ்வுவன்மை
தெவ் + முனை
=
தெவ்வு முனை
=
தெம்முனை
தெவ் + முனை
‘தேன்' என்னும் மொழிக்குச் சிறப்பு விதி :
தேன் என்னுஞ் சொல் மூன்றின மெய்களும் வருமொழி முதலில் வந்தால் இறுதியிலுள்ள னகரமெய் இயல்பாதலும், மெல்லினம் வந்தால் அவ்விறுதி னகர மெய் இயல்பாதலேயன்றிக் கெடுதலும், வல்லினம் வந்தால் அவ்வீற்று னகரமெய் இயல்பாதலேயன்றிக் கெடவந்த வல்லினமாவது அதற்கு இனமான மெல்லினமாவது மிகுதலும் விதியாகும்.