52
இளங்குமரனார் தமிழ்வளம் 4
(எ-டு) நான்கு + ஆயிரம்
நான்கு + வகை
―
நாலாயிரம்
நால்வகை
நான்கு + கவி
நான்கு + பால்
நாற்கவி நாற்பால்
நான்கு + மணி
―
நான்கு + நாழி
நான்மணி
நானாழி
}
―
உயிரும் இடையினமும் வர ஈறுகெட்டு னகரம் லகரமாயிற்று
வலிவர ஈறு கெட்டு னகரம் றகரமாயிற்று
மெலிவர ஈறு கெட்டு னகரம் திரியாது நின்றது
நிகழ் கால இடைநிலை :
கிறு, கின்று, ஆநின்று ஆகிய இம்மூன்றும் ஆண்பால் முதலிய ஐந்து பால்களிலும், தன்மை முதலிய மூன்று இடங் களிலும், நிகழ்காலத்தைக் காட்டுகின்ற வினைப் பகுபதங்களின்
இடைநிலைகளாம்.
(எ.டு) படிக்கிறான், படிக்கின்றான், படியாநின்றான்.
நிகழ்காலமும் எதிர்காலமுங் காட்டும் விகுதி :
உம் என்னுஞ் செய்யு மென் முற்று விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங் காட்டும்.
(எ.டு) உண்ணும்.
நிலைமாறுதல் :
எழுத்துகள் ஒன்று நின்றவிடத்து வேறோர் எழுத்துச் சென்று மாறி நிற்றற்கு நிலை மாறுதல் என்று பெயர்.
―
(எ.டு) மிஞிறு ஞிமிறு
தசை
சதை
கொப்பளம் பொக்களம்
'நின்' என்பவற்றிற்குச் சிறப்புவிதி :
நின் என்னும் மொழியின் இறுதி னகரம், வல்லினம் வரின் இயல்பாகும்.
(எ.டு) நின் + பகை
=
நின்பகை
நீளல் :
இயல்பாயிற்று.
விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளுவதற்கு நீளல் என்று பெயர்.