எழுத்து
பொன் என்பதற்குச் சிறப்பு விதி :
57
பொன் என்னுஞ் சொல் பகரமுதன்மொழி வந்தவிடத்துத் தன் ஈற்றின் னகரம் கெட அதன் முன்னர் முறையானே லகரமும் மகரமும் தோன்றி முடியும் செய்யுளிடத்து.
(எ.டு) பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி.
போலியின் இலக்கணம் :
ஒரு சொல்லின் ஓர் எழுத்து உள்ள விடத்தில் அவ்வெழுத்துக்கீடாக வேறோர் எழுத்து நின்றாலும் பொருள் வேறுபடாமல் ஒத்திருப்பது போலியாகும். அது மொழி மூன்றிடத்தும் வரும். (போலி - போல)
(எ.டு) பசல்
பைசல்
அரயர்
அரையர்
―
கலம்
கலன்
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
ஐந்து
அஞ்சு முற்றும்போலி
மகரத்தின் முன் மயங்கும் எழுத்துகள் :
மகரமெய்யின் முன் ப,
மெய்யெழுத்துகளும் மயங்கும்.
ய, வ என்கின்ற மூன்று
(எ.டு) கொம்பு; கலம்யாது கலம்வலிது.
முதலதே மெய்ம்மயக்கம் ஒரு சொல்லிலே வந்தது.
மற்றவை சொற்புணர்ச்சி, இவ்வாறே வருவன பிறவும்
உள.
மகரத்தின் முன் மெல்லினம் புணர்தல் :
மகரத்தின் முன் மெல்லினம் வருமாயின் இறுதியில் நின்ற மகரம் இருவழியிலுங்கெடும்.
(எ-டு)
அல்வழி
மரம் + ஞான்றது
=
மரஞான்றது
மரம் + நீண்டது = மரநீண்டது
மரம் + மாண்டது= மரமாண்டது