66
―
4 இளங்குமரனார் தமிழ்வளம்
இயல்பாதலும், பண்புத் தொகை உவமைத்தொகைகளில் மிகுதலும் வேற்றுமையில் வல்லினமாவது மெல்லினமாவது மிகுதலும் விதியாகும்.
(எ.டு)
வேய் + கடிது
=
வேய்கடிது
அல்வழியில் இயல்பாயது.
மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி வேற்றுமையில் மிக்கது.
நாய் + கால் = நாய்க்கால் வேற்றுமையில் வலி மிக்கது. வேய்க்குழல், வேய்ங்குழல் வேற்றுமையில் இனத்தோடு உறழ்ந்தது.
வேய் + குழல்
=
யரழ என்னும் மூன்று மெய்களின் முன் மயங்கும் எழுத்துகள் :
ந
6
யரழ என்னும் மூன்று மெய்களின் முன்னே க ச த படங் ந ம என்கின்ற எட்டு மெய்களும் உயிர்மெய்யாகி மயங்குதலு மல்லாமல் தாமே மெய்யாய் நின்று இரண்டு ஒற்றாயும் மயங்கும். ரகர ழகர மெய்கள் மொழிக்கு உறுப்பாகத் தனிக் குற்றெழுத்தின் பின்னே மயங்காவாம்.
‘யான்’ என்பதற்குச் சிறப்பு விதி :
யான் என்னும் உயர்திணைப் பெயர் யகரம் கெட்டு ஆகாரம் ஏகாரமாய் 'என்' என்றாயும், அல்வழியில் இயல்பாயும், வேற்றுமைக் கண் யகரம் கெட்டு ஆகாரம் ஏகாரமாவதோடு திரிதலுமாம்.
(எ-டு) யான் + கை
= எனகை
யான் + குறியேன்
=
யான்குறியேன்
யான் + பணி
=
எற்பணி.
ரகரம் பிறக்குமிடம் :
மேல்வாய் நுனியை நாக்கின் நுனியானது தடவ ரகரம் பிறக்கும். ரகர வீற்றின் முன் வல்லினம் புணர்தல் :
ரகர மெய்யின் முன் கசதப க்கள் வரின் அல்வழியில் எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை, வினைத்தொகை ஆகிய வற்றில் இயல்பாதலும், பண்புத்தொகை உவமைத் தொகை களில் மிகுதலும், வேற்றுமையில் மிகுதலும், வல்லினமாவது மெல்லினமாவது மிகுதலும் விதியாகும்.