எழுத்து
வாய் திறந்தவுடன் பிறக்கும் எழுத்துகள் :
73
அ ஆ ஆகிய இரண்டு எழுத்துகளும் வாய் திறந்த வுடனேயே பிறக்கும்.
விகாரம் (வேறுபாடு) :
மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும் வல்லின மெய்யை மெல்லின மெய்யாக்கலும் குற்றெழுத்தை நெட்டெழுத் தாக்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தைத் தொகுத்தலும் விகாரங்களாகும்.
விகாரப்புணர்ச்சி :
நிலைமொழியேனும்,வருமொழியேனும், இவ்விரு மொழி யேனும் தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று விகாரங் களுள் ஒன்றேயாயினும் பலவற்றையாயினும் பெற்றுப் புணர்வது விகாரப் புணர்ச்சியாகும்.
(எ.டு) பூ + கொடி
=
―
பூங்கொடி தோன்றல்
அல் + திணை
=
அஃறிணை திரிதல்
—
நிலம் + வலயம்
=
நிலவலயம் கெடுதல்
ஆறு + பத்து
=
அறுபது
கெடுதல், தோன்றுதல்
பனை + காய்
=
பனங்காய் கெடுதல், தோன்றல்,
திரிதல்.
விருத்த சந்தி :
ஏ
அ ஆவின் முன் ஏ ஐ வரின் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலுங்கெட 'ஐ' யொன்று தோன்றுவதும் ஆ ஆவின் முன் ஒ ஒள வரின் நிலைமொழி இறுதியும், வருமொழி முதலுங்கெட ஒள வொன்று தோன்றுவதும் விருத்தசந்தியாகும்.
(எ.டு) லோக + ஏகநாயகன்
சிவ + ஐக்கியம்
=
=
=
லோகைகநாயகன்
சிவைக்கியம்
தரா + ஏகவீரன் தரைகவீரன்
மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்
கலச + ஓதனம் = கலசௌதனம்