இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குரல்
அகல்வானில் பறந்திடுவேன்
ஆழினியில் மூழ்கிடுவேன்
புகவொன்னா இடமெனநான்
புதைந்தாலும் அவ்விடத்தும்
எங்கிருந்தோ குரல்கேட்கும்
இதயவுணர் வெழத்தட்டும்
சோர்ந்துடலம் தளர்வெய்திச்
சுகமெல்லாம் கனவெனவே
ஒர்ந்துன்னைக் கூவிடுவேன்
ஒருகணந்தான் என்றாலும்
எங்கிருந்தோ குரல்கேட்கும்
என்துயர்க்கே துாபமிடும்
என்றுமுன்றன் நாமவிளக்
கிதயமலர் ஏற்றிவைத்து
அன்றுமின்றும் கேட்டதெல்லாம்
ஆர்குரலென் றுணரும்வரை
எங்கிருந்தோ குரல்கேட்கும்
எச்சரிக்கும் அதன்மேலும்
எங்கிருந்தோ குரலில்லை
இங்ககத்துள் எனத்தெளிந்து
எங்ஙனுமே குரல்கேட்கும்
இன்பநிலை எய்தும்வரை
எங்கிருந்தோ குரல்கேட்கும்
ஏற்றமெலாம் பெறவுதவும்
127