பக்கம்:இளந்தமிழா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூக்காரி முல்லைப்பூ என்று சொல்லி முல்லை நகை தான் மலர மெல்லியலாள் அன்னம் போல் வீதி வழி தானடந்தாள். சாயம் விட்ட பழஞ்சேலை தையல் மிகக் காணுகின்ற தேயும் முகிற் கந்தையிலே சேர்ந்தசைந்த மின் போன்றாள்: பூவுலகோர் பரவசமாய்ப் புகழ்ந்தோதும் அஜந்தாவின் ஒவியமாம் பெண்ணொருத்தி உயிர்பெற்று வந்தது போல் கக்கத்தில் சிறு கூடை கையொன்றில் தானிடுக்கிப் பக்கத்தில் ஒரு கையைப் பாங்குடனே வீசி வந்தாள்: நெற்றியிலே செம் பொட்டு நீள்விழியில் கவியமுதம்: கற்றையிலே சேர்குழலாம் காரிருளின் குடியிருப்பு. 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/33&oldid=1358775" இலிருந்து மீள்விக்கப்பட்டது