பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இளமையின் நினைவுகள் முறையிட்டேன். அவர்கள் ஒரு நாள் ஊருக்கு வந்தார்கள். அம்மாவைக் கண்டார்கள். தம்பி பரமசிவம் கெட்டிக்காரப் பிள்ளை. மேலே படித்தால், நன்ருக முன்னுக்கு வரும். ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். அப்படி ஒன்றும் கெட்டு விடமாட்டான்' என்று சொல்லி, நெடுநேரம் பேசிப் பிறகு என் அன்னையாரை இணங்க வைத்தார்கள். தன் மகன் நன் ருகச் சிறக்க இருக்கிருன் என்பதை அறியின் எந்த அன்னை தான் விரும்பமாட்டார்கள்? அம்மாவும் சரி என்ருர்கள். என்ருலும் பிறகு என்னை அவர்கள் செங்கற்பட்டு அனுப்பும் போதும் மிகவும் வருந்தினர்கள். எப்படியோ ஒரு நல்ல நாளில் நான் என் பாட்டியாரை உடன் அ ைழ த் து க் கொண்டு, செங்கற்பட்டு சென்று, கொலம்பாஸ் உயர்நிலைப் பள்ளியில் நான்காவது படிவத்தில் சேர்ந்துவிட்டேன். செங்கற்பட்டு மாவட்டம் என்ற பெயர் இருப்பினும், செங்கற்பட்டில் மாவட்டத் தலைமை அலுவலகம் ஒன்றும் கிடையாது. அது ஒரு சிறிய பேரூர், அவ்வளவே. அங்கு அக்காலத்தில் இரண்டு உயர் நிலை ப் பள்ளிகள் தாம் இருந்தன. எங்கள் ஊரில் இருந்தே ஒருவர் அங்கே சென்று. பயின்று வந்தார். அவர் துணையைப்பற்றிக் கொண்டு நானும் எப்படியோ அங்கு சேர்ந்து படிக்கத் தொடங்கி விட்ட்ேன். செங்கற்பட்டில் ஒர் ஒதுக்குப்புறமாக உள்ளது பெரிய நத்தம் என்ற பகுதி. அதில் ஒர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரே அறையில் ஒரு மூலையில் பாட்டியார் சமைப்பார்கள். ஒரு மூலையில் நான் எனது பெட்டியை வைத்துக் கொண்டு படிப்பேன். சில சமயங் களில் வெளித் தாழ்வாரத்திலும், தெருத் திண்ணையிலும் கூடப் படிப்பதுண்டு. பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தி லேயே இருந்தமையின் முதலில் சற்றுக் கடினமாகவே இருந்தன. போகப்போகச் சிறிது சிறிதாகப் புரிந்துகொண்