பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இளமையின் நினைவுகள் போலும். எனவே இருவரும் மாமியார் வீட்டிலே வந்து தங்கிவிட்டார்கள். அவர்கள் தங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பினர்கள். எனது தந்தையாரோ இளமை யின் விளையாட்டில் தையலார் மையலிலே தாழ்ந்துவிழுந்து விட்டார்' என்பார்கள். ஊரில் சில நல்லவர்'கள் அவரை அவ்வாறு கெடுமாறு செய்த பணிக்கு முதலாளியாக இருந் தார்கள் என அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். எனது தந்தையார் பெருஞ் செல்வர் அ ன் றே னும் தாராள குணமுடையவர். நாளைக்கு என்று பாராது எதை யும் யாருக்கும் வாரிவழங்கும் நிலையில் வாழ்ந்துவந்தார். அவருக்கும் அன்னையும் பெரியன்னையும் இருந்தார்கள். அவர்கள் இ வ. ரு க்கு வேண்டியவற்றைக் கொடுத்துக் கொண்டே வந்தமையாலும் ஊரில் நல்லவர் நாலுபேர் இவரைச் சுற்றிக்கொண்டே இருந்தமையாலும் அவருடைய வள்ளல் தன்மை அவருக்கே தீமையாக மு டி ந் த து. அவருக்கு ஊரில் வேண்டாதவர்களே கிடையாது. ஒருசில நண்பர்கள், வீட்டில் உள்ள பொருள்களைக் கடத்திச்செல்ல அவருக்குத் துணையாகவும் இருந்தார்கள். அவர்களுள் யார் யார் எவ்வெவ்வாறு உதவினர்கள் என்பது தெரியாது. என் தந்தையார் இந்த நிலையில் இருக்கத் தாயாரோ தன் ஒரே மகன் வாழவேண்டும் என்ற கார ண த் தா லே பாட்டனர் சொத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று கருத முய ன் று, அதனுல் கணவைெடு மாறு பட்டுக்கூட நிற்பார்கள். இவர்கள் இவ்வாறு இருப் பதைக் கண்ட என் பெரிய தாயாரும் பெரிய தந்தையாரும் இவர்களோடு ஒரே குடும்பமாக இருந்தால் என் தந்தை யால் அவர்கள் உடைமைகளும் அழிந்துவிடுமோ என்று கருதி தனியாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் பாட்ட ருைம் தன் சொத்தினை இவர்களுக்கிடை இறக்குமுன்பே