பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னையும் அத்தனும்

29


வேண்டாம் என்றார்கள். நான் வாலாஜாபாத்தில் மூன்றாவது பாரம் தேறினால் மேலே படிக்கச் செங்கற்பட்டு செல்கிறேன்; இன்றேல் நின்று விடுகிறேன்' என்றேன். ஆகவே அவர்கள்-நான் படிக்கவேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபட்ட அன்னையார் - அன்பின் காரணமாக என்றும் அருகிலேயே இருக்கவேண்டும் என்ற பாசத்தாலே நான் தேர்வில் வெற்றி பெறக்கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டுவார்கள். தேறினுல்தானே வெளியூர் செல்வான்; இல்லாவிட்டால் இங்கேதானே இருப்பான்' என்று கருதிற்று அவர்கள் அன்புள்ளம். ஆயினும் நான் தேறி மேலே படிக்கச் செல்லும்போது, தான் தனியாக வீட்டில் இருந்துகொண்டு, ஊரில் பயிர் பச்சைகளைப் பார்த்துக்கொண்டு, பாட்டியையும் என்னுடன் அனுப்பி என் படிப்புக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். நான் வாலாஜாபாத், செங்கற்பட்டு முதலிய ஊர்களில் படிக்கச் செல்லும்போது தந்தையாரோ, பெரிய தந்தை யாரோ ஒருவரும் முன் வந்து உதவவில்லை. அம்மாவே யார் யாரையோ பிடித்து என் படிப்புக்கு வழிகாட்டச் சொன்னார்கள். பின் நான் படித்துக் கற்றோுேர் அவையில் முன்னின்று பல ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுவதையெல்லாம் கண்டபோது அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனனச்
 சான்றோன் எனக்கேட்ட தாய்'

என்று வள்ளுவர் குறளுக்குச் சான்றுக நின்றார்கள். அவர்கள் என்னைத் தாயின் அன்போடு வளர்த்தார்கள். தந்தைக்குரிய கல்வி பயிற்றுவிக்கும் பணியில் தலைநின்ருர்கள் அரசனைப்போல் தவறுசெய்யும் காலைத் தண்டித்தார்கள். நாள் தோறும் வீட்டில் உட்காரவைத்து ஆசிரியரைப்போல்