உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே

23

“சரிதான்‌! மற்றவற்றிற்கு என்ன பொருள்‌? ‘கொடுக்கிறவருக்கு மட்டும்‌ கொடு’, ‘கொடாதவர்களுக்குக்‌ கொடாதே’, ‘கொடுக்கிறவருக்கும்‌, கொடாதவருக்கும்‌ கொடு’, இவற்றுக்கெல்லாம்‌ என்ன கருத்து?” என்று கேட்டார்‌ மாமனார்‌.

“கொடுக்கிறவர்களுக்கு மட்டும்‌ கொடு என்றால், உன்‌ வீட்டுப்‌ பொருளை யாரேனும்‌ இரவல்‌ கேட்டால்‌, அதைத்‌ திருப்பிக்‌ கொடுக்கிறவர்களுக்கு மட்டும்‌ கொடு” என்பது பொருள்‌.

கொடாதவர்களுக்குக்‌ கொடாதே என்றால்‌, உன்‌ வீட்டுப்‌ பொருளை இரவல்‌ வாங்கிக்‌ கொண்டு போய்‌, அதைத்‌ திருப்பிக் கொடுக்காதவர்களுக்குக்‌ கொடாதே என்பது பொருள்‌.

கொடுக்கிறவர்களுக்கும்‌, கொடாதவர்களுக்கும்‌ கொடு என்றால்‌, உன்‌ உற்றார்‌, உறவினர்‌ உன்னிடம் ஏதேனும்‌ உதவியைக்‌ கோரினால்‌, அதை அவர்கள்‌ திருப்பிக்‌ கொடுத்தாலும்‌, கொடா விட்டாலும்‌ அவர்‌களுக்குக்‌ கொடுத்து உதவி செய்‌ என்பது பொருள்‌.

நகைத்துக் கொண்டு உட்காரு என்றால்‌, மாமன்‌, மாமி, கணவன்‌ இவர்களைக் கண்டால்‌ உயர்ந்த இடத்தில்‌ உட்கார்ந்திராமல்,‌ மகிழ்ச்சியோடு, சிறிது தாழ்ந்த இடத்தில்‌ உட்காரு என்பது பொருள்‌.

நகைத்துக் கொண்டு சாப்பிடு என்றால்‌, மாமன்‌, மாமி, கணவன்‌ இவர்கள்‌ சாப்பிட்ட பிறகு, எளிய உணவையும்‌ மகிழ்ச்சியோடு சாப்பிடு என்பது கருத்து.

நகைத்துக்கொண்டு தூங்கு என்றால்‌, மாமன்‌, மாமி, கணவன்‌ இவர்கள்‌ தூங்குவதற்கு முன்பு