உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேமன் : பிறன்மனை நயந்த பேதை

27

“பாவத்தைப்‌ பெற்றுக் கொண்டு மறுமையில்‌ துன்பத்தை அடைகிறபடியினாலும்‌, கூடாவொழுக்கத்தினாலே ஆணும், பெண்ணும்‌ அடைகிற இன்பம்‌ அற்பமானதாகையினாலும்‌, மனத்தில்‌ எப்போதும்‌ அச்சம்‌ குடி கொள்ளுகிறபடியாலும்‌, அரசனால்‌ கடுமையாகத்‌ ‌ தண்டிக்கப்படுவதினாலும்‌, அறிஞனாகிய ஆண்மகன்‌, பிறன்‌ மனைவியை விரும்பி ஒழுக்கந் தவறி நடப்பது கூடாது.”

புத்தர்‌ பெருமான்‌ அருளிய இந்த நல்லறிவுரையைக்‌ கேட்ட கேமன்‌, அன்று முதல்‌ தீயொழுக்கத்தை - பிறன்‌ மனைவியை நாடும்‌ இழிசெயலை விட்டு, நல்லொழுக்கத்தோடு நடந்து கொண்டான்‌. அவன்‌ திருந்தியதைக்‌ கண்டு, எல்லோரும்‌ மகிழ்ச்சியடைந்தார்கள்‌.

குறிப்பு :- பிறன்மனை விரும்பியொழுகும்‌ தீயொழுக்கத்தைப்‌ பற்றிப்‌ புத்தர் பெருமான்‌ அருளிய பொன்மொழிகளோடு, திருவள்ளுவர்‌ அருளிய நன்மொழிகளையும்‌ மனத்திற்‌ கொள்வது நலம்‌.

பகைபாவம்‌ அச்சம்‌ பழியென நான்கும்‌

இகவாவாம்‌ இல்லிறப்பான்‌ கண்‌.

எனைத்துணையர்‌ ஆயினும்‌ என்னாம்‌? தினைத்துணையும்‌
தேரான்‌ பிறன்‌இல்‌ புகல்‌.

அறன்வரையான்‌ அல்ல செயினும்‌ பிறன்வரையாள்‌
பெண்மை நயவாமை நன்று.

அறன்கடை நின்றாருள்‌ எல்லாம்‌ பிறன்கடை
நின்றாரின்‌ பேதையார்‌ இல்‌.

அறன்‌இயலான்‌ இல்வாழ்வான்‌ என்பான்‌ பிறன்‌இயலாள்‌

பெண்மை நயவா தவன்‌.

பிறன்மனை நயத்தலைப் பற்றிப்‌ புத்தர்‌ பெருமான்‌ அருளிய நல்லுரைகளும்‌, வள்ளுவர்‌ கூறிய நன்மொழிகளும்‌ ஒத்திருத்தல் காண்க.