பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நுரையீரல் : நுரையீரல் மிக முக்கிய சுவாச உறுப்பாகும். நாம் காற்றைச் சுவாசிக்கும் போது காற்றிலுள்ள ஆக்சிஜனை பிரித்து இரத்த மண்டலத்திற்கு அனுப்பி உடலெங்கணுமிருந்து வெளிப்படும் கழிவான கரியமில வாயுவை மூக்கு வழியாக வெளியேற்ற உதவுகிறது. இப் பணியைநுரையீரல் இடையீடின்றி நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.

குடல் : சீரண உறுப்பாக உள்ள குடல் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகுடல், பெருங்குட்ல் என்பவைகளே அவை. சிறு குடலில் சீரணமாகாத கழிவுப் பொருட்கள் பெருங்குடலை அடைகின்றன. பெருங்குடல் அதிலுள்ள நீரை மட்டும் உறிஞ்சிக் கொண்டு எஞ்சிய கழிவான மலத்தை மலக்குடல் வழியாக வெளியேற்றி விடுகிறது.

சிறுநீரகங்கள் : அடிவயிற்றுக்குக் கீழாக பக்கத்துக்கு ஒன்றாக அமைந்துள்ள சிறுநீரகங்கள் அங்கு வரும் இரத்தத்தில் உள்ள கழிவுகளைப் பிரித்து சிறுநீர்ப் பைக்கு அனுப்பிவிடுகிறது. போதிய அளவு சேர்ந்த கழிவுநீர் சிறுநீர்ப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

நமக்கு உள்ளது போன்றே பிராணிகளுக்கும் கழிவு உறுப்புகள் உண்டு. அவையும் கழிவுப் பொருட்களை அவ்வப்போது வெளியேற்றுகின்றன. தாவரங்களும் கழிவுகளை வெளியேற்றியே வாழ்கின்றன.


காகிதம் : இன்றைய சமுதாய வாழ்வில் காகிதத்தின் பங்கு அளவிடற்கரியதாகும்.

காகிதமும் அச்செழுத்தும் கண்டறிந்த பின்னரே அறிவு வளர்ச்சியும் அத்ன் அடிப்படையில் அறிவியல் முன்னேற்றமும் துரிதமடைந்தன எனலாம்.

காகிதத்தை முதன்முதலாகக் கண்டு பிடித்துப் பயன்படுத்தியவர்கள் சீனர்களாவர்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே காகிதம் செய்யும் கலையைக் கற்றிருந்தவர் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆயிரம்