பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தீக்குச்சி

செயற்கையாக வளர்க்கவும் முடியும். இதுவே 'திசு வளர்ப்பு' (Tissue cultuie) என அழைக்கப்படுகிறது.

நம் உடலைப் போன்றே பிற உயிரினங்களான விலங்குகளும் தாவரங்களும் திசுக்களாலேயே அமைந்துள்ளன. தாவரத் திசுக்களையும் விலங்குத் திசுக்களையுய தனியே பிரித்தெடுத்து வளர்க்க முடியும். இத்துறையில் உயிரியல் விஞ்ஞானம் வெகுவாக வளர்ந்துள்ளது.


தீ அணைப்பான் : திடீரென வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ, தீப்பற்றி எரியும்போது உடனடியாகத் தீயை அணைக்க உருவாக்கப்பட்ட சாதனமே தீ அணைப்பான் கருவி (Fire extin guisher) ஆகும். இக்கருவி சாதாரணமாக அடிப்பருத்தும் மேற்பகுதி கூம்பியும், கூம்பு வடிவில் இருக்கும். தற்போது பல்வேறு வடிவங்களில் தீ அணைப்பான் கருவிகள் உள்ளன.

இக்கருவியின் அடிப்பகுதியில் சோடியம் கார்பனேட் கரைசல் வைக்கப்பட்டிருக்கும். அதன் மேலாக மெல்லிய தகடு அமைந்திருக்கும். அதற்கும் மேலாக நீர்த்த கந்தக அமிலம் வைக்கப்பட்டிருக்கும். இக்கருவியின் கூம்புப் பகுதி முகட்டின் நுனி வெளியே துருத்திக் கொண்டிருக்கும். திடீரென ஏற்பட்ட நெருப்பை அணைக்க முனைபவர் இக் கருவியை எடுத்து துருத்திக் கொண்டிருக்கும் முனைப்பகுதியை தரையோடு வேகமாக மோதி உடைக்க வேண்டும். அப்போது முனை உடைபடுவதோடு கருவியினுள் நடுப் பகுதியில் உள்ள மெல்லிய தகடும் உடைபடும். அப்போது கீழேயுள்ள சோடியம் கார்பனேட்டும் கந்தக அமிலமும் ஒன்று கலக்கும். இதன் விளைவாக கார்பன்-டை யாக்சைடு எனும் கரியமில வாயு உருவாவதால் மிகுந்த அழுத்தத்தோடு விரைந்து வெளிப்படும். இவ்வாறு பீறிட்டு வரும் கரியமில வாயு எரியும் தீயை உடனடியாக அணைக்கிறது. சாதாரணத் தீ அணைப்புக்கு இவ்வகைக் கருவியே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சில சமயங்களில் எண்ணெய்க் கலன்கள் தீப்பிடித்து எரிவதுண்டு. தீம்பிழம்பாக வெளிப்படும் இப்பெருந்தீயை அணைக்க வேறு வகையான தீ அணைப்பான் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் நுரையை உண்டாக்கும் இரசாயனப் பொருள்கள் நிரப்பப்பட்டிருக்கும். எண்ணெய் எரியும்போது இக்கருவியின் முனையைத் தட்டினால் பெருமளவில் நுரை வெளிப்பட்டுப் பெருகி எரியும் எண்ணெய் மீது போர்வைபோல் படிந்து எரியும் தீயை அணைக்கும். இவ்வாறு தீயின் அளவுக்கும் தன்மைக்கேற்ப தீ அணைப்புக் கருவிகளும் பல வகைகளில் உள்ளன. முன்பு அளவில் பெரிதாக இருந்த தீ அணைப்பான்கள் இன்று புது வடிவுகளில் கையடக்கக் கருவிகளாக உள்ளன.

தீ அணைப்பான் கருவிகளை அதிகபட்சம் ஆண்டுக்கொரு முறையாவது கருவியுள் வைக்கப்பட்டுள்ள இரசாயன வேதிப் பொருட்கள் கெடாமல் உள்ளனவா என்பதைப் பரிசோதித்து அறிவது அவசியமாகும்.


தீக்குச்சி : ஆதி மனிதர்கள் தீயின் உபயோகத்தை அறிந்தபின்னர் சக்கிமுக்கிக் கற்களை வேகமாகத் தட்டி உராயச் செய்தும், தடியைக் கொண்டு கடைந்தும் தீப்பொறி உண்டாகச் செய்தும் அதைக்கொண்டு நெருப்பை உருவாக்கி வந்தனர்.

இராசயனக் கலவையைக் கொண்டு தீக்குச்சி வடிவாக்கும் முயற்சியை 1827ஆம் ஆண்டில் ஜான் வாக்கர் எனும் ஆங்கிலேயர் தொடங்கினார். பலவித முயற்சிகளுக்குப்பின் 1855ஆம் ஆண்டில்தான் கஸ்ட்டாவ் பாஸ்க் எனும் சுவீடன் நாட்டு அறிவியலாளர் இன்றுள்ள தீப்பெட்டி, தீக்குச்சி முறையைக் கண்டறிந்தார். இதுவே முன்புள்ள முறைகளைவிடப் பெரும் பாதுகாப்புடன் கூடிய முறையாக அமைந்தது.

தீக்குச்சி செய்வதற்கேற்ற பைன், ஆஸ்பென் போன்ற மரங்களைப் பலகைகளாக அறுத்து, அதை சிறு குச்சிகளாக வெட்டிச் சேகரிக்கின்றனர். இவற்றைச் சிறு துவாரமுள்ள சட்டகத்தில் வரிசையாக அடுக்கி, அக் குச்சி முனைகளை உருகிய பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கின்றனர். பின், அம்முனைகளை இராசயனக் கலவைக் குழம்பில் தோய்த் தெடுக்கின்றார். ஒட்டிய இராசயனக் கலவை காய்ந்தபின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குச்சிகளை மெல்லிய தகடுபோல் செதுக்கிய மரப் பலகையை மடித்து உண்டாக்கிய தீப்பெட்டியில் பொதிந்து வைப்பர். பின் அதன் மீது காகிதத்தை ஒட்டுவர். தீப்பெட்டியின் இருபுறமும் தீக்குச்சி உராய்ந்தவுடன் தீப்