பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூச்சு மண்டலம்

249

மூக்குத் துவாரங்களின் உள்ளே மேற்பகுதியில் மெல்லிய சவ்வு அமைந்துள்ளது. இது நரம்பு அணுத்திரளாலானதாகும். இங்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் நரம்பு நுனிகள் மணத்தின் தன்மையை நுட்பமாக உணரும் உணர்வுப் பகுதியாகும். இஃது மூளைப்பகுதியுடன் இணைந்துள்ளதால் மணத்தை நம்மால் நன்கு நுகர்ந்தறிய முடிகிறது.

மணத்தை நுகரும் மணப்புலனும் சுவையை உணரும் சுவைப்புலனும் ஒன்றுக்கொன்று நெருக்கமுடையனவாக இருப்பதால் ஒரே சமயத்தில் மணத்தையும் சுவையையும் ஒருசேர அறிந்துணர முடிகிறது.

சளியால் நாம் பாதிக்கப்படும்போது நம் மூக்குத் துவாரங்களில் உள்ள சவ்வுப் படலம் அழற்சியடைய நேரிடுகின்றது. இதனால் மணப்பகுதிக்குச் செல்லும் வழி அடைபடுவதால் நம்மால் மணத்தை நன்கு அறிய இயலாமற்போய்விடுகிறது. இவ்வாறு ஏற்படும் அழற்சியைப் போக்க மருத்துவரை நாடி உரிய சிகிச்சை பெற்று அழற்சியை நீக்க வேண்டும். இல்லையேல் அது மூச்சுக்குழல் அழற்சி போன்ற நோய்க்காளாக்கிவிடும்.

தெளிவாகப் பேசுவதற்குதவும் புலனாகவும் மூக்கு அமைந்துள்ளது. குரல் நாண்களின் அதிர்வால் உருவாகும் பேச்சொலி தொண்டை வாய், மூக்குப் பகுதிகளில் உள்ள காற்றின் துணையால் வலுவடைந்து தெளிவான பேச்சொலியாக வெளிப்படுகிறது. வெளிப்படும் ஒலி வெளிக்காற்றின் மூலம் மற்றவர் காதுகளை அடைகிறது. இவ்வாறு தெளிவான ஒலி வெளிப்பாட்டுக்கும் முக்குப் பெருந்துணை புரிகிறது.


மூச்சு மண்டலம் : நாம் உயிர் வாழ சுவாசம் அவசியம். நாம் காற்றை உள்ளே இழுப்பதையும் வெளியே விடுவதையும் 'சுவாசம்’ என்கிறோம். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்கினங்களும் தாவரங்களும் சுவாசித்தே உயிர் வாழ்கின்றன.

மூச்சு மண்டலத்துள் ஐந்து முக்கிய உறுப்புகள் அடங்கியுள்ளன. மூக்கு, குரல் வளை,

மூச்சு மண்டலம்

தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல் ஆகியனவாகும். நாம் உள்ளிழுக்கும் மூச்சு, மூக்குத் துவாரங்கள், குரல்வளை, தொண்டை வழியே மூச்சுக்குழல் மூலம் நுரையீரலை அடைகிறது. மூச்சுக்குழலுடன் நெஞ்சின் இரு