பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மஹிளாதேவி கலாசாலை மர்மம்

125


நினைத்தாரோ தெரியவில்லை. எங்களைப் பார்க்க வெட்கமுறுபவர்போல மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.

இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டேபிள்களை அக்கனவான் அண்டையிலேயே நிறுத்திவைத்து விட்டு, தாம் மட்டும் எங்களை நோக்கி வந்தார். எனவே, மாணவிகளாகிய நாங்கள் பிரின்ஸிபாலுக்குப் பின்னாகப் போய் ஒதுங்கி நின்றோம். பிரின்ஸிபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்மிடமே வருகிறார் என்று குறிப்பாக அறிந்து கண்களைத் திறந்துகொண்டு எழுந்து நின்றார்.