பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

என் தாய் முகத்தைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. கோபத்தில் வரம்புமீறி மிகவுங் கடுமையாகப் பேசி விட் டாள் என்று நான் அப்போது நினைத்தேன். அவ்வார்த்தை களின் வேகம் என் மனதில் ஊடுருவிப் பாய்ந்து சுருக் கென்று தைத்தது. எனவே, நான் என் தாயின் பின்பக்கம் போய் அவள் தோளைப்பற்றிய வண்ணம் சாந்தப்படுத்த முயன்றேன். என் சிற்றப்பா அதற்குமேல் ஒன்றும் பேசா மல் தலையைக் குனிந்துகொண்டு போய்விட்டார்.

எங்களது பரிதாபகரமான நிலையைக் கண்ட என் தங் தையின் ஆப்த நண்பர்களில் ஒருவரான துவிபாஷி ஜனுர்த் தனம் நாயுடுவும், அவரது குடும்பத்தாரும் எங்களைத் தக் கள் ஆதரவில் வந்திருக்குமாறு முதலில் கூறினர். ஆனல் என் தாய் அதற்கு இசையவில்லை. ஆகவே, அவர்கள் திருவல்லிக்கேணியில் காலியாய் இருக்கும் தங்கள் வீடொன்றில் வந்து வசிக்குமாறு மிகவும் வற்புறுத்தி வேண்டிக்கொண்டனர். இவ்வளவு தாரம் அவர்கள் பரிந்து கூப்பிடும்போது பிடிவாதமாக மறுப்பது கன்மு .யிாது என்று உட்கொண்டு தன் தாய் ஒருவாறு இணங்கி

. பதின்ைகாவது அதிகாரம்

கர்ப்பக் குறியறிந்த தாய் மரணம் திருவல்லிக்கேணியிலுள்ள விட்டில் காங்கள் குடி, புகுத்து ஒரு வாரமாயிற்று. என் சிற்றப்பா எங்களுக்கான . வசதிகளைக் கூடுமானவரை செய்து கொண்டிருந்தார். எனக்கு-என் தாய்க்குக்கூட அவர் உதவியையே கடைசி வரை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்துவதென்பது சிறிதும்