பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்


அடுத்த கணம், குண்டு பெருத்த சத்தத்தோடு வெடித்தது. அவ்வளவுதான்! உடனே நான் மூர்ச்சைபோட்டுக் கீழே விழுந்தேன். ஸ்மரணை யிழந்த பின்னர், என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது; நான் மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது, என்னைச் சூழ்ந்து யாவரும் நின்று