பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148



இவ்வினாவுக்கு விடைகூற முனைந்த பெருமானார் “எந்த ஒரு குறிப்பிட்ட இன, மொழிகளைப் பற்றிக் கூறாமல், ஒரு இனத்தைச் சார்ந்தவன் மற்றொரு இனத்தைச் சார்ந்தவன் மீதோ அல்லது இனத்தின் மீதோ தீவிரமான, கெடுதலான, தீங்கு தரக்கூடிய, அந்த இனத்திற்கு மாபெரும் பாதகத்தை அளிக்கக்கூடிய ஒரு தீய காரியத்தை செய்யத் துணிந்து விட்டான் என்றால், நம் சமுதாயத்தைச் சார்ந்தவன் தானே, இதைத் தொடங்கியிருக்கிறான், அந்த இனத்தின் அடிப்படையில் அவனுக்குத் துணையிருப்பதுதானே முக்கியக் கடமை; நீ என்ன தீங்கு செய்தாலும் உனக்கு நான் துணையாக இருக்கிறேன் செய்! என்று அவனுக்குத் துணை போனால், அது அந்த இனத்தைச் சார்ந்தவன் மீது நீ கொண்டிருக்கும் பற்றல்ல; அது அந்த இனத்தின்மீது கொண்டிருக்கும் வெறி. அந்த வெறியோடு நீ செயல்பட்டால் நிச்சயமாக நீ அழிவாய். உன்னை நம்பி உன் துணையை எதிர்பார்த்து, அந்தச் செயலில் முனைப்பாக ஈடுபடக் கூடியவனும் அழிவான்” என்றார். இதனை, இவ்வாறு கூறும் அறிவுரைகளைச் செம்மையாகப் புரிந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்ற ஐயம் அண்ணலாருக்குத் தலை தூக்கவே மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள உடனே ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலானார். “கிணற்றுக்குள் விழுந்துவிட்ட ஒரு ஒட்டகத்தை, ஒரு தனி மனிதன், வாலைப்பிடித்து நான் மேட்டுக்கு இழுத்து விடுவேன், கிணற்றிலிருந்து தூக்கி விடுவேன், அதனைக் காப்பாற்றி விடுவேன் என்று முனைந்து நின்றால், ஒட்டகத்தை அவனால் தூக்க முடியாதது மட்டுமல்ல; வாலைப் பிடித்த இவனும் அந்தக் கிணற்றுக்குள் விழுந்து விடுவான். விழுந்த அந்த ஒட்டகத்தோடு இவனும் அழிவான்” என்று விளக்கினார்.

ஆகவே, இனப்பற்று இருக்கலாமே தவிர அது இனவெறியாக மாறாமல் நம்மைக் காத்துக் கொள்ள