பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215



படித்த பெண்களைப் பார்ப்பதே குதிரைக் கொம்பாக இருந்த ஒரு பிற்போக்குச் சமூகத்தில் ஆண்களைப் போலவே அனைத்துப் பெண்களுக்கும் கல்வியைக் கட்டாயமாக்கியவர் அண்ணல்நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

ஒரு ஆண் படித்தால் அவனளவில் வளர்ச்சிக்கு வழி ஏற்படும். ஆனால் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட முடியும். ஒரு பெண் வீட்டில் படித்திருந்தால், அவள் படிப்பின் சிறப்பையும் மேன்மையையும் நிச்சயம் உணர்ந்தவளாயிருப்பாள். அக் குடும்பத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் திறம்பட வளர்த்து கல்வியறிவு மிக்கவர்களாக்குவாள். திட்டமிட்டுக் குடும்பத்தை சீரும் சிறப்புமாக செம்மையுற நடத்தி, வெற்றிப் பாதையில் குடும்பத்தை வழிநடத்திச் செல்வாள். அதனால்தான் பாரதிதாசன் ‘படித்த பெண்ணுள்ள குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ எனப் பாடி பெருமைப்படுத்தினார்.

பெண் கல்வி குடும்பத்தின் ஆணிவேராக அமைகிறது. ஆணி வேர் வளமாகவும் வலுவாகவும் இருந்தால் அம் மரத்திலிருந்து கிளைக்கும் கிளைகளும் வலுவோடும் வனப்போடும் அமைவது இயல்வு. பூக்கும் பூவும் காய்க்கும் கனியும் கண்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கே வனப் பூட்டுவனவாகும் என்பதில் ஐயமில்லை.

படித்தத் திறம்பட்ட பெண் தன் கணவனையே பிள்ளையாகக் கொண்டு தன் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்யுமளவுக்கு ஆற்றல் பெற்றவளாகி விடுகிறாள். ஆண் செய்யும் அத்தனை காரியங்களுக்கும் தோன்றாத் துணையாக நின்று உதவுகிறாள். எனவேதான் ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்' என்ற புது மொழியே உலகில் எழுந்துள்ளது.

பெண் படிக்காதவளாக அமைந்து விட்டால் அவ்வீடு இருண்ட வீடாக ஆகிவிடுகிறது. பெற்ற பிள்ளைகளைத்