பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231


மெய்ஞ்ஞானப்போதகரை மாபெரும் குடியராக, பெண் பித்தராகச் சித்தரிக்கும் இழிநிலை ஒரு சிறு மொழி பெயர்ப்புப் பிழையால் உருவாயிற்று.

தவறான பெயர்ப்பு தந்த பேரழிவு

தவறான மொழிபெயர்ப்பால் கருத்துப் பிழை மட்டுமல்ல, ஒரு நாட்டின் புகழ் பெற்ற இரு நகரங்களே அழிந்த வரலாறும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் போது போர்ட்ஸ்டாம் மாநாட்டிற்குப் பின் அமெரிக்கா, ஜப்பானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதற்குப் பதிலாக ஜப்பான் 'மோகு ஸ்ட்ஸு' என ஜப்பானிய மொழியில் தந்தி மூலம் பதில் அளித்தது. இதற்குச் சரியான பொருள் “ஆராய்கிறோம், பொறுக்கவும்” என்பதாகும். ஆனால், தந்தி பதிலை வாஷிங்டனில் பெற்ற மொழி பெயர்ப்பாளர் தவறாக நிராகரிக்கிறோம் என மொழி பெயர்த்து முடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார். நிராகரிக்கிறோம் என்ற பதிலைப் பெற்ற குடியரசுத் தலைவர் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு பெரும் நகரங்களின் மீது அணு குண்டுகளை வீசுமாறு ஆணையிட்டார். அவ்வாறே அணுகுண்டு வீசப்பட்டு, இரு நகரங்களும் அழிக்கப்பட்டது. மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட சிறு பிழை இரு நகரங்கள் அழியக் காரணமாயிற்று. ஒரு உன்னதமான சூஃபிக் கவிஞரை மிகக் கேவலமானவராகக் காட்டக் காரணமாயிற்று. இவை வரலாற்றில் படிந்த களங்கங்களாகும். இறை நெறியை - உன்னதமான ஆன்மீக உணர்வை உலகுக்குணர்த்திய உமர்கையாமிற்கு ஏற்பட்ட இழிவு மனதைப் புண்படுத்தும் ஒன்றாகும்.

நெறி பரப்பிய ஞானியர்

“சூஃபியர்” என அழைக்கப்படும் இம் மெய்ஞ்ஞானிகள்தான் இஸ்லாத்தை - இறை நெறியை மக்களிடத்தே கொண்டு சென்ற பெரியார்கள். இன்னும் சொல்லப்