பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்ந்த முள்ளும் என்னையே

படுத்தும் பாடு கொஞ்சமோ?

ஒய்ந்து போனேன். இன்னமும்,

உயிர்பி ழைத்து வாழ்வதோ ?


கொன்று என்னைத் தின்னுவீர்.

கோடி கோடிப் புண்ணியம்.

ஒன்று மட்டும் முன்னரே

உரைத்து விட்டுச் சாகிறேன்.


தின்னும் போது தொண்டையில்

சிக்கி டாதி ருக்கவே,

முன்ன தாக எனது கால் .

முள்ளை நீக்கும் நண்பரே !”


உண்மை என்று கம்பியே

ஒநாய் மகிழ்ச்சி கொண்டது ;

பின்னங் காலில் முள்ளேயே

பிடுங்கி எடுக்கப் பார்த்தது.


உற்று ஒநாய் பார்க்கையில்

ஓங்கிக் கழுதை கால்களால்,

பட்பட் டென்று உதைத்தது;

பற்கள் உதிரச் செய்தது!

56