உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உன்னைப் பார்த்தால் என்வால்தான்
உடனே எனக்கு நினைவில்வரும்.
என்னைப் பார்த்தால் நீயும்தான்
இழந்த புதல்வனை எண்ணிடுவாய்.

பாலை ஊற்றி விட்டதனால்
பகைமை தீர்ந்து போய்விடுமோ?
வேலை இல்லா மானிடனே.
வீண்தான் இதுவும் என்றறிவாய்!’


93