பக்கம்:ஈச்சம்பாய்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

119


பெல்லிபாய், மேளாத் தலைவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். பள்ளிக் கட்டிடத்தின் முன்னால், லாரியில் சாய்ந்தபடி, அவசரக் கோலமாய் நின்ற சிக்கையாவை நோக்கி, மேளாத் தலைமைக்கு கும்பிடு போடுவதுபோல் போட்டாள். மாறி மாறிக் கும்பிடு போட்டாள். மன்னிச்சுடணும், என்று சிக்கையாவுக்கும் கேட்கும்படி அலறலோடு கம்பிட்டாள்.

அப்போது -

லாரியின் ஓடல் சத்தம் எல்லோருக்கும் கேட்டது. ஆனால் பெல்லிபாய்க்கு மட்டும் அவள் குழந்தையின் சத்தமே கேட்டது.

குமுதம், 1-5-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/121&oldid=1371688" இலிருந்து மீள்விக்கப்பட்டது