பக்கம்:ஈட்டி முனை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

3? வானமண்டலங்களைப்பற்றி, மிருகங்களைப்பற்றி தாவர இனங்களைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி, மனோ தத்துவம் பற்றி, விஞ்ஞா பூர்வமான ஆராய்ச்சிகளை எழுது. இவற்றை ஆராய்ந்தவர்கள் வரலாறுகளை எழுது. வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார், மனிதர் எப்படி வாழ்கிறார்கன், அவர்கள் வாழ்க்கைப் பாதையின் மேடுகள் என் னென்ன - அவற்றின் காரணம் என்ன என்பன வற்றை மனோதத்துவ ரீதியாக ஆராய்ந்து எழுது, வாழ்க்கையை, மனோதத்துவத்தைப் பா தி த் து அதன் மூலம் சமூகத்தையும் உயிர்க்குலத்தையும் பாதிக்கிற செக்ஸ் விஷயங்களைப் பற்றி விஞ்ஞான ரீதியாகச் செய்யப் பெறுகிற ஆராய்ச்சிகளை எழுது, ஆராய்ந்து, கண்டு கேட்டு மனோதத்துவ ரீதி, யாக எழுது. கட்டிலடங்காத கவிதைகள் எழுது. தூங்கு கிறவர்களைத் தட்டி எழுப்பும்படியாக உணர்ச்சி கொடுக்கும் பாடல்கள் எழுது. எழுதவா விஷயமில்லை : எழுத வேண்டிய விஷயங்களை - எப்படி எப் படி எழுதுவது என்று தெரிந்துகொண்டு எழுதப் புகுந்து உண்மையான இலக்கியத்தை வரையமுய லும் போது, எழுத விஷயங்களுக்கு பஞ்சமில்லை. எழுதத் தான் நேரமில்லை; ஓய்வு போதாது என்று உணர்வாய். சோர்வுறாதே. உள்ளத்தில் உறுதிகொள். உன் சிந்தனைகளில் மின்னலின் சக்தி மிளிரட்டும். உனது இதயத்தில் மின்னலின் வஜ்ரசக்தி மின் னட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/39&oldid=1370348" இலிருந்து மீள்விக்கப்பட்டது