இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25. வரி - அளவு - நாணயங்கள்
வரிகள்
நாட்டின் வருவாய் அங்கு வசூலிக்கப்படும் பல்வேறு வரிகள் மூலமே கிடைக்கின்றன.
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களில் இங்கு வழங்கப்பெற்ற பல்வேறு வரிகள் குறிக்கப் பெறுகின்றன.
அந்தராயம் | — | நிலவரி நீங்கிய சிறு வரி. | |
ஆராய்ச்சி | — | கோயிற்பணிகளை மேற்பார்வைக்காகச் செலுத்தும் வரி | |
இறைக்கண்பு | — | கம்பு தானியமாகக் கோயிலுக்குக் கொடுக்கும் வரி | |
இறைபுரவு | — | அரசுக்குத் தரும் நிலவரி. | |
ஈழம் புஞ்சை | — | உலோகம் உள்ள நிலத்து வரி, ஈழவர் வரி எனவும் கூறுவர். | |
உகவை | — | மகிழ்வான காரியங்களுக்குச் செலுத்தும் வரி | |
உப்பாயம் | — | உப்புவரி (அரசுக்குத் தரும் வரி) | |
ஊர் வினியோகம் | — | ஊர்ப்பொதுக்காரியங்களுக்குச் செலுத்தும் வரி | |
எலவை | — | அமங்கலகாரியத்துக்குச் செலுத்தும் வரி | |
ஒட்டச்சு | — | அரசுக்குச் செலுத்த உடைமையாளரும் உழுபவரும் ஒப்புக்கொண்ட வரி | |
ஓலைச் சம்படம் | — | ஓலை எழுதக் கூலி | |
கடமை | — | செலுத்த வேண்டிய நிலவரி | |
காணிக்கை | — | கோயில் காணி உரிமையாக செலுத்தும் வரி | |
கார்த்திகைப்பச்சை | — | கார்த்திகை விளக்குக்குக் கொடுக்கும் வரி | |
காவல் கூலி | — | காவல் காக்க கொடுக்கும் வரி(பாடி காவல்) | |
கீழிறை | — | சிறுவரி |