பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி அன்பால் வாழ்வோம் மாண்டார் போல் மாநிலத்தில் மானமின்றி வாழவைத்த தீண்டாமைப் பூண்டதனைத் தேடி நட்டுப் பேணிவிட்டோம். மாண்டார் உயிர்ப்பிக்கும் மா மருந்தாம் காந்தி யன்பால் தீண்டாமைப் பூண்டதனைக் கீண்டெறிந்து வாழ்ந்திருப்போம். அறங் கடந்த ஆட்சிதனை அஞ்சுகின்ற நெஞ்சுடனே புறங் கிடந்த அன்னியரைப் போற்றியடி பணிந்திருந்தோம். அறம் வளர்க்கும் அருள்பெருக்கும் அரு மருந்தாம் காந்தியன்பால் அறந் துறந்த புல்லரெல்லாம் அறிவு பெற வாழ்ந்திருப்போம். பாடுபட்டுப் பயிரிட்ட பருத்திதனைக் கப்பலேற்றி பாடுபடா நாட்டினரின் பண்புயர வாழ்ந்துவிட்டோம். பாடுபட்டு ராட்டுருட்டிப் பசிதணிக்கும் காந்தி அன்பால் நாடுபட்ட வறுமையற்று நலம்பெருக வாழ்ந்திருப்போம். கொல்லவல்ல குண்டென்றால் குழைந்தொடுங்கும் கோழையராய் அல்லலுற்றே அடிபணியும் அடிமைகளாய் வாழ்ந்திருந்தோம். 32