பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிவை நீக்கிய பெரியார் வாழ்ந்த நாடு: திராவிட மாநாடு வாழ்க! செல்வத் திருநாடு (திரா) பழமையான மூடப் பழக்க வழக்கத்தில் பாழ்பட்ட நெஞ்சர்க்குப் புரியார், படித்துணர்ந்து பகுத்தறிவுக் கட்சி தன்னைப் பரவச் செய்துவரும் நெறியார். (திரா) இழிவை நீக்கும் ஈ.வெ.ராமசாமி என்ற எங்கள் தந்தை உண்மைப்பெரியார் - மன இருளை நீக்கி நம்மை மனிதனாக்கி மதவெறியைப் போக்கி நல்ல நெறியைக் காட்ட வந்த (திரா) புத்தர் பிரான் சாகாத சரித்திரப் புகழ் தாங்கும் தெய்வங்கள் சரதமாகிய நிலையடைந்தவர் தன்னலமற்றவர்கள் செத்தும் (சாகா) முறிந்து கால் முடமாகிய ஆட்டைப் பரிந்தணைத்துத் துயர் தீர்த்தார். முறையே தவறிய மிருகப் பலிதனை முன்னின்றகற்றி உயிர் காத்தார். கருணைக் கடலாம் கெளதம புத்தர் கற்றறிவாளர் கருதும் சித்தர் அறிவில் வளர்ந்த அன்பின் வடிவம் அவர்தான் எந்தன் கடவுள் என்றும் (சாகா) - நல்லதம்பி 34