பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 அளித்திடல், இவை எமது பணி என்று கூறிடுவீர். இந்த நிலை பெற்றோம் என்பதனை அறிவிக்கும் சான்றுகளே, யாம் பெற்றுள்ள பட்டங்கள் என்பதனைச் சொல்லாலும் செயலா லும் காட்டிட வாரீர் எனக் கனிவுடன் அழைக்கின்றேன். ... இவை ஏட்டில் படித்திட இனிப்பவை; விளக்கிப் பேசிட ஏற்றவை; வியந்து கூறிடத் தக்கவை. ஆனால், நடை முறைக்குக் கொண்டு வருதல் எளிதன்று. தொடர்ந்து கடைப்பிடித்தல் அரிது, அதற்குத் தளராத உறுதியும், மங்காத ஊக்கமும், ஓயாத உழைப்பும், சீரான நோக்கமும், தன்னல மறுப்பும், மிக மிகத் தேவை. பல்கலைக் கழகம் இந்தப் பண்பினைத் தந்தி டும்; தந்துள்ளது என்று எண்ணுகிறேன். ஆம்! உமது சீரிய பணியின் மூலம் மெய்ப்பிக்க வேண்டுகின்றேன். தேவையற்றவை, தீது தருபவை, பொருளற்றவை. பொருத்தமற்றவை, இவையெல்லாம் பழமையின், பெயர் கொண்டோ நமது உடமை என்ற பாசம் காட்டியோ நெளிந்திடக் கண்ட்பின், விட்டு வைத்திடாமல் அவற்றினை நீக்கிடும் அறப்போரினைத் தொடுத்திடுதல் வேண்டும். பிறநாட்டுத் தேனென்றால் சுவைக்காமலா இருக்கும்? அவர் கூறியுள்ளார். ஆகவே அஃது அறிவுடையதாகவே இருந்திடுதல் வேண்டும் - என்று எண்ணி இருந்திடாமல், அவர் உரைத்தது இஃது என்பதற்கு முதவிடம் தராமல் உரைத்துளது யாது என்பதற்கே முதலிடம் தந்து உண்மை யெனில், உயிர் கொடுத்தேனும் காத்திடுவோம். அன்று எனில் உயிர் போவதெனினும் எதிர்த்து நீக்கி அறிவுத் துறைப் புரட்சியிலே ஈடுபட வருமாறு பட்டம் பெற்றுள்ள நல்லோரை அழைக்கின்றேன்.