பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

5:2. கருணாநிதியின் ஆர்வம் முதல் பட்ஜெட் தயாரிக்கும் போதே இந்தத் திட்டத் துக்கு பணம் ஒதுக்கும்படி என்னுடைய தம்பி கருணாநிதி என்னைத் துளைத்துக் கொட்டி விட்டார்-ஒதுக்கியிருக் கிறேன் என்று சொல்லியும் திருப்தியடையாமல் அது பட் ஜெட்டில் இருக்கிறதா என்று பார்த்த பின்னரே திருப்தி அடைந்தார். இவ்வாறாக இப்போது ரூபாய் 2 கோடி அளவுக்கு செல விடத்தக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டு இன்று அதன் கால் கோள் விழாவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மிகச் சிறந்த திறம் படைத்த நிபுணர்கள் இருக்கிறார்கள். குறைந்த செலவில் இத்திட்டத்தை நிறை வேற்றித்தர அவர்கள் முயலவேணடும். தொகைதான் ஒதுக்கியாகிவிட்டதே என்று" இருந்திடாமல் குறிப்பிட்ட தொகையைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவேற் றித் தரவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நிறைந்த புகழ் வந்தடையும். இப்படியும் ஒரு ஆறா? பார்க்கிற வெளிநாட்டாரெல்லாம் இப்படி ஒரு ஆறு இந்த ஊரில் இருந்ததா? என்று கேட்கும்படியாக அமைய வேண்டும். இதற்குமுன் இந்த ஆறு இப்படி இருக்கவில்லை. தாங் கள் இதனை இப்படி திருத்தி அமைத்திருக்கிறோம் என்று பெருமிதத்துடன் கூறுகிற நிலைமை இருக்கவேண்டும். நம்முடைய நாட்டில் இயற்கையின் எழிலை அழிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் உண்டு, நல்ல பூங்காவை