பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53 இருக்கவிட மாட்டார்கள். அதை அழிப்பதிலே அவர்களுக் கொரு தனி இன்பம். நல்ல கட்டிடம் இருந்தால் கரியால் அதன் சுவர்களில் கிறுக்கி வைப்பார்கள். நல்ல வாய்க்கால் ஓடினால் கல்லையும் மண்ணையும் அதில் தள்ளி நீர் ஓடாதபடிச் செய்துவிடுவார் கள். இப்படிப்பட்ட விந்தை மனிதரை வேறு எந்த நாட்டி லும் பார்க்க முடியாது. எழிலும் பயனும் ஒருசேர அமைந்த சீரிய திட்டம் இது- இதனோடு இணைந்த பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் வாணிபத் துறையில் ஆந்திரத்துக்கும் தமிழகத்துக் கும் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்த உதவும். அந்த கால்வாயும் பலவருடங்களாகத் தூரு வாராமல் விடப்பட்ட இடைஞ்சல் ஏற்பட் தால் படகுப் போக்குவரத்துக்கு டுள்ளது. போக்குவரத்திலேயே நாவாய் போக்குவரத்தே செலவு குறைந்தது. பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் பற்றியும் பொதுப்பணி அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். நகருக்கு எழில் தோற்றத்தையும் வாணிபப் பெருக்கை யும் அளித்திடக் கூடியது இந்தத் திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றி சென்னையைச் சிங்கார திருநகராக்குவது நமது கடமை!