& 6 லா. ச. ராமாமிருதம்
è ?
- உன் அண்ணா எங்கே?
உங்களை அழைத்துவர ஸ்டேஷனுக்குப் போயிருக் கான்.”
என் குரலில் லேசாய்ப் பொறுமையிழந்தேன். அதெல் லாம் வேண்டாம்னு உன் அக்காளிடம் மெனக்கெட்டுச் சொல்லியிருந்தேனே :
ஏன் தப்பா?" இல்லை. ஏன் அந்த சிரமம்? வயதானவர்கள் எங்களுக் கெல்லாம் ஒரு அசட்டு ரோசம் உண்டு தெரியுமோன்னோ?”
புன்னகை புரிந்தாள், என்னவோ அண்ணாவுக்குஏன் எங்கள் எல்லாருக்குமே அதில் ஒரு சந்தோஷம்.'
என்னை முன்னே பின்னே பார்த்திராமல் அந்த நெரிசலில் என்னை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? லா.ச.ரா!' என்று கத்துவானா?’’
சிரித்தாள். புத்ர" ஜாக்கெட்டில் உங்கள்முகம்...” டேயப்பா! அந்த போட்டோ பத்து வருஷமாச்சு, அப்போதைக்கிப்போ எவ்வளவு மாறிட்டேன்! எனக்கே தெரியறதே!'
மாறினால்? முகத்தின் கோடுகள் வாகு மறைஞ்சுடுமா? அந்தப் புலிக் கண் அப்படியேதான் இருக்கு. ’’
சரிதான். நான் என் இடத்துக்குத்தான் வந்திருக் கிறேன்.
சமையலறை வாசற்படியில் நின்றேன். உள்ளே வரலாமா?' '
- தாராளமா வளங்கோ. வரணும்.’’
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்க இது நான் பயன்படுத்தும் பாணி! ஆனால் எல்லா இடங்களிலும் உப