பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*—wound wirgaon &lso soluépid

எளியன் என்றோ கிடைக்கவில்லை என்பதாலோ மதுவினைப் பழிப்பவர்தம் சொல்லுக்கஞ்சிப் பருகிடாமல் இருந்திடேன், களிப்பதற்கே என்பதன்றிச் சுமையற்றிருக்கக் குடிக்கிறேன்; எழிலன் செல்வி, நெஞ்சில் உற்றாய் இனி நான் மதுவை அருந்திடேன்.

'நான்தான்் என்றுசொல்லிக் கொண்டேஅவ்வப் போதுவருகிறான், நான்தான்் என்று தங்கத்தோடும் வெள்ளியோடும் வருகிறான், ஏன்ற அவன்தான்் அற்றை நாளின் அலுவல் வரையறுக்கையில் நான்தான்் என்று மறைந்திருந்த இறப்புத் தாவிக் குதித்திடும். வையகத்தின் பிணைப்றுந்தே ஒருவாள்கூட வாழ்ந்திலேன், வையவாழ்வில் ஒரு கணத்தும் மகிழ்வில் ஆழ்ந்து வாழ்ந்திலேன் கையகப்படுத்தும் காலன் கையானாக வாழ்ந்துளேன்" ஐய இன்னும் உலகின் துட்பம் அறிந்து கொண்டேன் இல்லையே. கடந்தகாலம் இறந்த ஒன்று கருதி அதனில் வாழ்ந்திடேல் நடக்கப்போகும்."நாளை'அதனை நம்பி ஏங்கி நின்றிடேல் நடந்தகாலம் வரும் ஒர்காலம் நோக்கி எதையும் கட்டிடேல் நடக்கும்நாளில் மகிழ்வு கொள்வாய், கற்பனைக்குள் வாழ்ந்திடேல். 215

99 த. கோவேந்தன்