பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெண் கொலைகள், தற்கொலைகள் என்று வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. பெற்றுத்தரலாகாது; ஆனால் உன் உடல் தேவை. இந்த இலக்கில் அவள் பெண்மையில் செருக்கப்பட்ட ஊசிகளை முட்களை எடுத்துப் பார்க்கும் முயற்சியே இது. இந்நாள் இரத்தமும் சீழுமாக வதைக்கும் கூர்முனைகளைக் களைந்து சல்லடையாகிப் போகும் வடிவங்களை உணர்த்த முயலும் முயற்சியே இது. இவளுக்கு ஆறுதல் அளிக்கவேண்டும். இவள் வெறும் கருவி அல்ல; உடல் இயந்திரமல்ல. ஆணுக்குத் துணை தோழி; தாய்; தாரம்; சகோதரி. மக்கள் பெருக்கப் பொறுப்பில் அவளை மட்டும் காரணியாக்க வேண்டாம்? கற்பு நெறி என்பது கணவனுக்கு மட்டும் உடல் என்பதல்ல. கற்பு நெறியின் இலக்கணம் போகம் தவிர்த்த இல்லறம். 'உனக்காகத்தான் தாய், சகோதர மக்கள், பாசமாகப் பிறந்து வளர்ந்த இடங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கு உன்னை மகிழ்விப்பதற்காகவும், சந்ததி கொடுத்து உன் உறவுகளை உன் குலத்தை வாழவைக்கவும் வந்தாள். நீ ஒருவனே அவளுக்கு இந்த இடத்தில் உயிராதாரமான உறவு. எனவே எந்த நிலையிலும் அவளை வருத்தலாகாது. அவளுக்கில்லாத மகிழ்ச்சியை நீ துய்க்கலாகாது' என்றெல்லாம் புராதன விதிகள் சொல்கின்றன. மனிதர்கள் எல்லோரும் எப்போதும் குறையற்றவர்கள் அல்ல. உன் மனைவியிடமும் சில குறைகள் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் புரிந்து கொண்டு அன்பு செலுத்த வேண்டும். அவளுக்கு எந்நாளிலும் துன்பமோ துரோகமோ இழைப்பவனாக ஒரு கணவன் இருக்கலாகாது. அப்படி நடப்பவன் கணவனே அல்ல. ஒரு பெண்ணின் நன்னடத்தைக்கு விதிக்கப்பட்ட நெறிகளுக்கு மேலாகவே அப்பெண்ணைக் கைப்பிடித்தவனுக்கு ஒழுக்க நெறிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. புலனடக்கம் ஆணுக்கு மிக இன்றியமையாத ஒழுக்கம். அவள் மாதவிலக்காக இருக்கும் நிலையிலும் கரு முதிர்ந்த பேறுகால நிலையிலும் கூட புலனடக்கம் கடைப்பிடிக்காத கணவன்மார்கள் இருப்பதை அறிய அதிர்ச்சி ஏற்படுகிறது. நான் மருத்துவர் ரங்காசாரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக முனைந்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பலவும் அறிய நேர்ந்தது. அன்னையர்க்கு ஓர் அன்னை போல் அந்த அரிய மகப்பேறு மருத்துவர் மருத்துவ அறிவியலில் நச்சுக் கொல்லி