பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

எனது இளம் உள்ளத்தில் எழுந்த அலைகள்-எண்ணங்கள்- தோன்றிய ஐயப் பாடுகள் -சிறுது சிறிதாக உரம் பெற்றன.

பயன் என்ன ?

பலரைக் கேட்டேன். பல நூல்களைப் படித்தேன், ஆண்டுகள் பல சென்றன. அறிவிலே சிறிது தெளிவும் சிந்தையிலே திண்மையும் பெற்றேன்.

இதை எழுதத் துணிந்தேன். ஏன்? நான் அறிந்தவற்றை என் போன்றார் பலருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆசையினால்.

"ஆசை பற்றி அறையலுற்றேன்" என்பது கம்பர் வாக்கு.


2. உலகம் அணுமயம்

நில உலகிலே வாழ்கிறோம் நாம். வான வீதியிலே உள்ளது ஞாயிறு; சூரியன். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல்கள். எனினும் சூரியன் நமது தோழன். நமது வாழ்வுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவன். நம்மை வாழ்விப்பவன் சூரியன்;