பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இல்லை; ஆறுகள் இல்லை; நீர் நிலைகள் எதுவும் இல்லை; பருவ கால மாறுதல் எதுவும் இல்லை. மழையும் இல்லை.

சந்திரன் பிறந்த பிறகு பூமியின் உடம்பிலே மேடு பள்ளங்கள் தோன்றின. உடல் சிறிது குளிர்ந்தது. எனவே வான மண்டலத்தில் திரிந்து கொண்டிருந்த மேகங்கள் பூமியின் மீது மோகம் கொண்டன. மழை பெய்தது. கொதிக்கிற செங்கல்லில் தண்ணீர் விட்டால் ஆவியாவது போல் பூமியில் பெய்த மழையும் அந்த நொடியிலேயே ஆவியாகிக் கொண்டு இருந்தது. இப்படி மழை பொழிவதும் ஆவியாவதும் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஓராண்டு அன்று. நூறாண்டு அல்ல; பல நூறு ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள். மழை! மழை! ஓயாத மழை. தங்கு தடங்கல் இல்லாத மழை. அதனாலே மேலும் பூமி குளிர்ந்தது. ஆவியாக மாறுவதும் குறைந்தது. பூமியிலே இருந்த மேடு பள்ளங்கள் நீர் நிரம்பப் பெற்றன. எங்கு நோக்கினும் ஒரே தண்ணீர், பரந்து அகன்ற வெள்ளக்காடு. பூமியின் மேற்பரப்பில் முக்கால் பகுதி நீர் நிரம்பியது.