பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 to: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் இன்னாச்சொல் Yk y'r ஓர் இன்னாச்சொல்லால் தீய செயல்கள் இரட்டிப்பாடு விடுகின்றன. அ ஷேக்ஸ்பியர் பேச்சில் தீமை கலந்துவிட்டால், மனத்திலும் தீமை கலந்து பேசுகிறவர்கள் எப்பொழுதுதான் தீமையைப் பேசாமல் விடுவார்கள்? கேட்பவர்கள் எப்பொழுதுதான் தீயதைத் கேளாமல் இருப்பார்கள்? அ ஹேர் அவன் என்னைப்பற்றி உலகிற்கெல்லாம் இழிவாகப் பேசட்டும். உலகமெல்லாம் என்னைப்பற்றி அவனிடம் இழிவாகப் பேசுவதைவிட அது எவ்வளவோ மேலாகும். அ டாஸ்லோ Fs-60) 5 ★ கீழே விழுந்து கிட்ப்பவரைத் தூக்கி விடாதவன், எச்சரிக்கையாயிருக்கட்டும். அவன் வீழ்ந்து கிடக்கையில் எவரும் கை நீட்டி அவனைத் தூக்கமாட்டார். ஜோபெர்ட் கொடுப்பதில் ஆளைப்பற்றி அதிகம் விசாரிக்க வேண்டாம். அவன் தேவையைப்பற்றி விசாரிக்கவும். மனிதன் உதவிக்கு அருகதையாய் இல்லாவிட்டாலும், அது மனித சமூகத்திற்குத் செய்யும் உதவியாகும். க. குவார்லென் ஈகையில்லாத செல்வன் ஒரு போக்கிரி. அவன் மூடன் என்பதையும் நிரூபிப்பது எளிதாயிருக்கும். அ ஃபீல்டிங் துன்பத்திற்காக இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்வ இயல்பு. அ எச் மான்