பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ப. ராமஸ்வாமி11



நாம் வெறுக்கின்ற விஷயங்களைக் கண்டு அஞ்சுவதாகப் பாவனை செய்கிறோம். உண்மையில் நாம் அஞ்சுபவைகளை வெறுப்பதற்காகவும் பாவனை செய்கிறோம். அ கோல்டன் நன்றியைக்காட்டிலும் கடமையைச் செய்ய அச்சமே துண்டு கின்றது. ஒழுக்கத்தை விரும்பியோ, எல்லாப் பொருள்களை யும் அளித்துள்ள ஈசனுக்கு நன்றி செலுத்தவோ நேர்மையாக நடப்பவன் ஒருவன் என்றால், தண்டனைக்கு அஞ்சி நேர்மையாக நடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

ைகோல்டுஸ்மித்

நாம் அடிக்கடி அஞ்சுவதையே சில சமயங்களில் வெறுக் கிறோம். அ ஷேக்ஸ்பியர் குற்றத்தையும். இருள் நிறைந்த செயல்களையும் தொடர்ந்து அச்சம் வரும் நேர்மையான உள்ளத்திற்கு அச்ச்மே தெரியாது. E ஹாவர்டு அச்சமே. வருவதை அறிவுறுத்தும் தாய். அ டெய்லர் உண்மை வீரத்திற்கு மரணத்தினால் வரும் வேதனையைவிட கோழைத்தனத்திற்கு அச்சத்தால் வகிக வேதனை ஏற்படு கின்றது. அ எபர். பி. ஸிட்னி ஆதாரமில்லாமல் தோன்றும் பயங்கரங்களையெல்லாம் விரட்டிவிட்டால், மனித சமூகம் அதிக இன்பமடையும். == அ. ஜான்ஸன் நல்ல மனிதர்களுக்கு அச்சங்கள் குறைவு. = டோவி தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன் பயத்தை வெளிக்காட்டினால் அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும். ைசெஸ்டர்ஃபீல்டு